அமானுஷ்ய அப்பாவும் ஒரு கிரிக்கெட் கேள்வியும்

மக்களே,

கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிங்கையில் இருந்து கஷ்டப்பட்டதால் பதிவுகள் எதனையுமே இட மனம் வரவில்லை. சமீபத்தில் சகா பட்டாப்பட்டி ராஜ் அவர்களின் மரணம் என்னை உலுக்கி எடுத்து விட்டது. என்னுடைய பல பதிவுகளில் ரெகுலர் ஆக வந்து கமெண்ட் இட்டு என்னை வளர்த்து விட்ட அவரின் நினைவாக தமிழகம் வந்தவுடன் இடும் முதல் பதிவை அவருக்கு அர்பணிப்பு செய்கிறேன். இனிமேல் பதிவுக்குள் ஓடுவோம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய தலைமுறை சேனலை பார்க்க நேரிட்டது (தலைவிதி). அதில் பத்ரி அங்கிள் (கிழக்கு டி ஷர்ட்டுடன் தான்),W V ராமன்,மனுஷ்ய புத்திரன் மற்றும் பெயர் நினைவில் இல்லாத ஒரு அதி புத்திசாலி ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். நான் பேசாமல் எழுந்து சென்று விட்டு இருக்க வேண்டும்தான், ஆனால் TV இருந்த அந்த அறையில் எனக்கு ஒரு வேலை இருந்ததால் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  WV Raman

W V ராமன் ஒக்கே, கிரிக்கெட் ஆடி இருக்கிறார்-அதனால் அவர் வந்து பேசுவதில் தவறில்லை.  ஏனென்றால் அவருக்கு விஷயம் தெரியும்.

Badri Uncle பத்ரி அங்கிள் கூட கிரிக்கின்ஃபோ இணையதள தொடர்பினால், அவருக்கும் ஒரு டிக்-அவரும் பேசலாம் தவறில்லை தான். ஆனால் அடுத்த முறை அந்த கிழக்கு T ஷர்ட் இல்லாமல் வேறு எந்த சட்டையாவது அணிந்து வந்தால் நலம்,உங்க பிராண்டிங் தொல்லை தாங்க முடியல அங்கிள், ப்ளீஸ்.

ஆனால் அடுத்து வந்த இரண்டு பேர் - அங்கேதான் பிரச்சினையே.

அந்த ஒரு அதி புத்திசாலி IPL என்பது சூதாட ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று ஆரம்ப முதலே பேசிக்கொண்டு இருந்தார். அது கூட பரவாயில்லை (பாவம் அவருக்கு என்ன குடும்ப பிரச்சினையோ), ஆனால் அதற்க்கு அடுத்து வந்ததுதான் அதைவிட கொடுமை.uyirmai

3 பேர் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்கு சீனியை பதவி விலக கோரிய மனுஷ்யபுத்திரன்,உயிர்மை அலுவலகத்தில் யாராவது கையாடல்/குற்றம் செய்தால் அதை விசாரிக்க முனவருவாரா அல்லது தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கம்பெனியை இழுத்து மூடுவாரா? ஒரு மைக்கும் டிவி சேனலும் கிடைத்துவிட்டால் என்னது என்பதே தெரியாமல் பேசும் இவர்களை போன்ற அதிபுத்திசாலிகள் தான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய கேடு.

*இந்த இடத்தில் வேறு ஒரு கேள்வி மனதில் எழுகிறது கூச்சப்படாமல் பின் குறிப்பாக அந்த கேள்வியை படித்துக் கொள்ளுங்க பாசு.

எல்லா விஷயத்திலும் வந்து கருத்து சொல்லும் மனுஷ்யபுத்திரன் எப்போதில் இருந்து Master Of All Subjects ஆனார் என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஏதாவது ஒரு அயல்நாட்டு பல்கலைகழகம் அப்படி ஒரு விருது கொடுத்து இருந்தால் எனக்கு ஏன் அந்த விஷயம் தெரியாமல் போனது? (தெரிந்தால் நானும் ஒரு டாக்டர் பட்டம் வாங்கி போட்டுக்கொள்வேனே? டாக்டர் வெடிகுண்டு வெங்கட் - எப்படி இருக்கிறது?).

  • சினிமா விமர்சனமா? டிக்
  • அரசியலா? டிக்
  • கிரிக்கெட்டா? டிக்
  • சமூக அவலங்களா? டிக்
  • கல்வியா? டிக்
  • அதிஷா போன்ற இளைஞர்கள் புகை பிடிப்பதை விடுவதால் ஏற்படும் நன்மையா? டிக்
  • முத்துராமலிங்கம் படம் எடுப்பதால் தமிழ் சினிமாவிற்கு ஏற்படும் நன்மையா? டிக்
  • பதிவுலகில் ஏற்படும் சர்ச்சைகளா? டிக்
  • கள்ளகாதல் பிரச்சினையா? டிக்
  • கல்லூரி பேராசிரியைகளை காம கண்ணோட்டத்தோடு பார்க்கும் மாணவர்களா? டிக்

என்று எல்லா விஷயங்களையும் நுணுக்கமாக தெரிந்துகொண்டு அதில் மேதாவிலாசத்துடன் பேச மனுஷ்யபுத்திரனுக்கு யார் பயிற்சி கொடுத்தது? தயவு செய்து அந்த Institute பெயர் எது என்று சொன்னால் அங்கே சென்று அடியேனும் ஒரு கோர்ஸ் முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாத நேரங்களில் இதுமாதிரி தொலைகாட்சி சேனல்களுக்கு சென்று ஜாலியாக ஏதாவது உளறிக்கொட்டிவிட்டு மன்னிக்கவும் கருத்து சொல்லிவிட்டு வரலாமே

MA

அதனால் நமக்கு காசு, பணம், துட்டு, மணி, Money எதுவும் வராவிட்டாலும் (சாறு புழிஞ்சிதா அங்கிள் கவனிக்கவும்,இந்த வேலைக்கு நீங்க சரிப்பட்டுவரமாட்டீங்க, அதனால் உங்க பக்த கேடிகளிடமே பணவசூல் செய்யுங்க சார்), நானும் நம்ம அதிஷா மாதிரி ஒரு பிரபலமாவது ஆவேனே? அதன்மூலம் சினிமா, கிரிக்கெட், சூதாட்டம் என்று பின்னர் சம்பாதித்து கொள்ளலாமே?

*பின் குறிப்பு:

இதே கேள்வியை இந்த தொலைகாட்சியை நடத்தும் அண்ணன் க்ரீன் பேர்ல் இடமும் கேட்க ஆசைதான் (அது யார் க்ரீன் பேர்ல் என்று எதிர் கேள்வி கேட்பவர்கள் தயவு செய்து இடத்தை காலி செய்யவும்).  ஆனால் குடும்ப பிரச்சினை எனக்கு நன்றாக தெரிந்த விஷயம் என்பதால் க்ரீன் பேர்ல் மகர் (மகனைத்தான் மரியாதையுடன் மகர் என்று சொல்கிறேன்) வெள்ளை வேட்டி சத்யா நாராயணாவிடமே கேட்கிறேன்.

புதிய தொலைக்காட்சியில் இருக்கும் யாராவது ஒருவர் தவறு செய்தால், அதை காரணம் காட்டி அண்ணன் வெள்ளை வேட்டி சத்யா நாராயணா அந்த சேனலின் பொறுப்பில் இருந்து பதவி விலகுவாரா? அல்லது அந்த தவறு செய்த ஒரு ஆளை கண்டுபிடித்து விசாரணை செய்து தகுந்த தண்டனை வாங்கி தர முயல்வாரா? 

இந்த இடத்தில் சம்பந்தம் இல்லாத ஒரு தகவல் - புதிய தலைமுறையில் தவறு செய்த ஒரு ஆள் என்றால் அது காமெடிதான். ஏனென்றால் ஊரில் இருக்கும் அத்துணை ஃப்ராடுகளுக்கும் இடம் கொடுத்துள்ள சேனலாயிற்றே அது? அங்கே சேருவதற்கு தான் இதுபோன்ற தகுதிகள் தேவை.

இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் முதல் நாள் + இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் India in 2011

மக்களே,

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் (வழக்கம் போல இன்றைய ஆட்டத்திலும் முன்னணி பெற்றும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தவறி விட்டோம்) இந்திய அணியின் விளையாடும் ஆட்டங்களையும், அது எப்படி இருக்கும் என்று என்னுடைய கணிப்பையும் இந்த பதிவில் பார்ப்போம்:

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: 2010-2011

இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் கூட இந்திய அணியானது வரும் ஜூன் மாதம் வரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்திலேயே இருக்கும் அளவிற்கு தன்னுடைய ரேங்கிங் பாயிண்ட்டுகளை பெற்றுள்ளது. (நடுவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கிண்ண போட்டிகள் வருகின்றன - டெஸ்ட் போட்டிகள் கிடையாது).

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது. கடந்த 14 போட்டிகளில் இரண்டாம் முறையாக டாசில் ஜெயித்தார் தோனி. அதுவே பெரிய விஷயம். பார்க்கலாம், இந்த வருஷமாவது அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று. டாசில் ஜெயித்த பிறகு இந்திய அணியானது பீல்டிங் செய்யும் முடிவை எடுத்தது. கடந்த இரண்டு போட்டிகளில் கடினமான சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்வதும், தென்னாபிரிக்கா அணி சற்று சாதகமான சூழ்நிலையில் பேட்டிங் செய்வதும் தொடர்ந்தது. ஆனால் இந்த போட்டியில் அப்படி நடக்க வில்லை. காலையில் பந்துவீச்சிற்கு சாதகமான நிலையில் தென்னாபிரிக்க அணி விளையாட வந்தது. ஊருக்கு உத்தமர் ஆகிய கிரீம் ஸ்மித் சென்ற போட்டியில் தைரியமாக முதல் பந்தை சந்திக்காமல் விரைவில் ஜாகிர் கானிடம் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்சில் என்னமோ தெரியவில்லை, தானே ஜாகிர் கானின் முதல் பந்தை சந்தித்தார். சற்றே தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால், ஸ்ரீஷாந்த் பந்துவீச்சின் வேகத்தையும், அவரது பேச்சின் தாக்கத்தையும் சந்திக்க முடியாமல் ஒரு கற்றுக்குட்டி போல டென்ஷன் ஆகி அவுட் ஆனது அந்த போட்டியின் சிறப்பு அம்சம். இந்த நிலையில் யார் ஜாகிர் கான் வீசும் பந்தை சந்திப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்தேன்.

ஜாகிர் கானை பொறுத்த வரையில் ஸ்மித்தின் விக்கெட் எப்போதுமே ஒரு டிராவலர்ஸ் செக் போனது. எப்போது வேண்டுமானாலும் அவர் என்கேஷ் செய்துக்கொள்வார். சென்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் ஸ்விங் இருக்காது என்ற சூழலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதல் பந்தை சந்தித்த ஸ்மித், இந்த போட்டியில் காலை வேளையில் காற்றின் ஈரப்பதம் மற்றும் ஓவர்காஸ்ட் கண்டிஷன் சூழலில் எட்டாவது டெஸ்ட் ஆடும் பீட்டர்சனை முதல் பந்தை சந்திக்க விட்டார். தொண்ணூறு போட்டிகளை கண்ட ஒரு வீரர் இப்படி ஆடுவது எனக்கு சற்றே ஏமாற்றத்தை கொடுத்தது. 

சென்ற போட்டியில் சேவாக் (வழக்கமாக சேவாக் முதல் பந்தை சந்திக்க மாட்டார்) விஜய் முதல் பந்தை சந்திக்க சென்ற பொது, தடுத்து தானே முதல் பந்தை சந்தித்து ஆடினார். அதுதான் ஒரு சீனியர் செய்யும் செயல். ஆனால், வழக்கமாக முதல் பந்தை சந்திக்கும் ஸ்மித், ஜாகிர் கான் என்றவுடன் பீட்டர்சனை ஆடவிட்டது அவரது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்தியது. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஜாகிர் கான் தன்னுடைய டிராவலர்ஸ் செக்கை என்கேஷ் செய்துவிடுவார் என்று. அதுதான் நடந்தது.

வெளிச்சம் குறைவாகவும், லேசான மழைத்தூறல் வந்ததாலும் ஆட்டம் ஒன்றரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணியினரை இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியடைய வைத்தார். பின்னர் அந்த அணியின் மிகச்சிறந்த இரண்டு ஆட்டக்காரர்களும் சேர்ந்து அணியினை தொய்வில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள். குறிப்பாக ஆம்லா விளையாடியபோது, அவருக்கு ஆடுகளம், சூழல், தட்பவெப்பம், எதிரணி என்று எதுவுமே தோன்றாமல் வெறும் பந்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக ஆடினார். அவரது கவுண்டர் அட்டாக்கிங் ஆட்டம் இந்திய அணியை சற்று தடுமாற வைத்தது. முதல் 50 ரன்கள் குவிக்க 111 பந்துகள் எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்கா, ஆம்லாவின் அதிரடியால் இரண்டாவது 50 ரன்களை வெறும் 51 பந்துகளிலேயே குவித்தனர்.  பின்னர் ஸ்ரீசாந்தின் அதிரடியான பவுன்சர்களால் சற்றே கவனம் குறைந்து தன்னுடைய விக்கெட்டை ஒரு சிறப்பான பிளான் செய்யப்பட்டு எக்சிகியூட் செய்யப்பட்ட பந்துவீச்சில் இழந்தார் ஆம்லா.

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லியுள்ள டீ வில்லியர்ஸ் ஸ்ரீசாந்தின் மற்றுமொரு அட்டகாசமான அவுட் ஸ்விங்கர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 164/4. விரைவிலேயே மற்ற விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்று இந்திய அணி நினைத்தாலும், கப்தான் தோனியின் டிபென்சிவ் அப்ரோச்சினால் (காலிஸ் மற்றும் பிரின்ஸ் இருவரின் தேர்ந்த ஆட்டத்தினாலும், நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தினாலும்) அடுத்து வேறெந்த விக்கெட்டையும் சாய்க்க இயலவில்லை. ஆட்டமும் முடிந்தது.

1st Day நாளைக்கு காலையில் விரைவாக காலிஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, முன்னூறு ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தினால், இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு இருக்கிறது. இந்த ஆடுகளமானது வழக்கமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் மட்டைப்பந்தாட்டதிற்கு (அதாங்க பேட்டிங்) மிகவும் சாதகமான ஒன்று. அதற்க்கு பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சுழல் பந்து வீச்சிற்கு சற்று (கவனிக்கவும், சற்றுதான்) உபயோகமாக இருக்கும். ஆகையால் நாளைக்கு இந்திய அணியின் ஆட்டமானது இந்த போட்டியை நிர்ணயிக்கும்.

என்னுடைய கணிப்பு: இந்தியா முதல் இன்னிங்க்சில் நானூறு ஓட்டங்களை குவித்தால் வெற்றி பெரும்.

ஒரு நாள் போட்டிகள்:Ind Vs SA 

இந்திய அணி சேவாக் இல்லாமல் விளையாடப்போகிறது. அணியின் பந்து வீச்சு இந்த போட்டிகளை நிர்ணயிக்கப்போகிறது. இந்த ஒரு நாள் போட்டிகள் தொடர் அதிக அளவில் ரன்களை கொண்ட ஒரு தொடராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் - ஒரு நாள் போட்டிகளில் இருநூறு ரன்களை குவித்த பிறகு சச்சின் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவே இல்லை. அவர் விளையாடும் அடுத்த போட்டி இதுதான். யுவராஜ் சிங்கிடம் இருந்தும், யூசுப் பதானிடம் இருந்தும் சிறப்பான ஆட்டத்தினை எதிர்ப்பார்க்கலாம்.

என்னுடைய கணிப்பு: தென்னாபிரிக்கா 3-2 or 4-1.

India’s upcoming matches in World cup and 2 immediate Tours after the IPL 3:

Indian Team நாளைக்கு ஆஷஸ் மற்றும் இந்திய அணியின் போட்டிகளை பற்றி விரிவாக பேசுவோம்.

Related Posts Widget for Blogs by LinkWithin